தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த மே 8ஆம் தேதி வெளியானது. இதையடுத்து, தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற்று வருகின்றன. இதில் கடந்த மே 5 ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிக்கான விண்ணப்பமும், அரசு கலைக் கல்லூரியில் மே 6 ஆம் தேதி முதல் விண்ணப்பம் பெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த நடப்பாண்டு இளநிலை படிப்புக்கான சேர்க்கை இணையதள விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19ம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே கல்வி இயக்குநரகம் அறிவித்திருந்தது. இதில் பல்லாயிரம் பேர் நாள்தோறும் விண்ணப்பித்து வரும் நிலையில், மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்றும், www.tngasa.in என்ற இணையதளத்தில் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
- Advertisement -