தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியதை ஒட்டி, பலர் குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மாவட்டத்திற்கு இந்த விடுமுறையைக் கொண்டாடப் படையெடுக்கின்றனர். அந்த நேரத்தில், சுற்றுலாப் பயணிகளைக் கவரப் பல நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சிகள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அந்தவகையில், தற்போது ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சி இன்று (மே 19) சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த அரசு தாவரவியல் பூங்காவில் அமைத்திருக்கும் மலர் கண்காட்சி வரும் மே 23ம் தேதி வரை நடைபெறும் என்றும், இந்த கண்காட்சியைக் காண வரும் பெரியவர்களுக்கு ரூ.100, 10 வயது கீழ் உள்ள சிறார்களுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -