தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று (மே 19) திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.மேலும், அவிநாசி, ஆட்டையம்பாளையம், காசிகவுண்டன்புதூர். பழங்கரை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்வதால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதைப்போல், கரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது அங்குள்ள பசுபதி பாளையம், காந்தி கிராமம், ஜவஹர் பஜார், தான்தோன்றி மலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- Advertisement -