ஸ்ரீ கருட பகவானுக்குச் சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது. அதைப்போல், கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் ஒரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்படி மகிமை பெற்ற கருட சேவையை, நீங்கள் காஞ்சியில் அதிகாலை வேளையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.
ஏனென்றால், அங்கு ஞானம், பலம், ஐஸ்வர்யம், விர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார். மேலும், திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி, ப்ராகாம்யம் ஆகிய எட்டு விதமான சமப்த்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார். இதனால் கருடனுக்கும் சார்பர்ணன் என்றொரு பெயருண்டு.
மேலும், கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி ஆகும். இப்படி கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களிலிருந்து விடுதலை பெறுவர் என்பது ஐதீகம்
- Advertisement -