தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், இந்த கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு ஓஆர்எஸ் இருப்பு வைக்கத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலைப் பயணம் மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், கால் நடைகளுக்குத் தேவையான குடிநீர், நிழற்கூடங்கள், தீவனம் மற்றும் மருத்துவ வசதி செய்யவும் என்று கூறியுள்ளார்.அதைபோல், இந்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் காலையிலேயே பணியை தொடங்கி வெப்ப அலை தொடங்கும் முன் பணியை முடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்
- Advertisement -