தமிழகத்தில் இன்று (மே 19) காலை 10 மணியளவில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மொத்தம் 91.39 % சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதைப்போல், இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,026 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளதால், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45%, அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.24%ஆக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் (97.67%) முதலிடம், 2ம் இடத்தில் சிவகங்கை ( 97.53%) 3ம் இடத்தில் விருதுநகர் (96.22%) உள்ளது. அதைப்போல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகபட்சமாக ஆங்கில பாடத்தில் 98.93% பேர் தேர்ச்சி, சமூக அறிவியல் – 95.83%, மொழிப்பாடம் – 95.55%, அறிவியல்- 95.75% , கணிதம் – 95.75% சதவீதமாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகபட்சமாகக் கணிதத்தில் 3,649 பேர் 100 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர்.