நீங்கள் வாரத்துக்கு ஒருநாளோ, இரண்டு நாள்களோ பிரியாணி சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், அது ஹோட்டல் பிரியாணியாக இல்லாமல் இருப்பது பாதுகாப்பானது. ஏனென்றால், அதில் சுவையூட்டி, நிறமூட்டி, எண்ணெய் என எல்லாமே அளவுக்கதிகமாக சேர்க்கப்படும். அதிலும், இப்போதெல்லாம் பக்கெட் பிரியாணி, ஒருகிலோ பிரியாணி என்றெல்லாம் விற்கப்படுகிறது. இந்தமாதிரி அளவுக்கு மீறி ஒருவர் சாப்பிடுவது மிகவும் தவறானது.
மேலும், நாம் எப்போதும் ஃப்ரெஷ்ஷாக சமைத்த பிரியாணியைச் சாப்பிடுவது தான் ஆரோக்கியமானது. ஆனால், ஏற்கெனவே சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து மறுபடி சூடுபடுத்தப்பட்ட பிரியாணி நிச்சயம் உடலுக்கு ஆரோக்கியக்கேட்டை ஏற்படுத்தும். அதிலும், இரவு நேரங்களில் பிரியாணி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இரவு முதல் அடுத்த நாள் காலை வரை நம் உடலிலுள்ள செரிமான மண்டலத்துக்கு நிச்சயம் ஓய்வு வேண்டும். அதைப்போல், ஒருவேளை இரவு பிரியாணி சாப்பிட்டுவிட்டு மறுநாள் காலை இட்லி, தோசை, வடை என வயிறு முட்டச் சாப்பிடுவது மிகவும் தவறு என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.