- Advertisement -
பொதுவாக நாம் சில நேரங்களில் ஓய்வு எடுத்துத் தூங்குவோம், பின்னர் எழுந்தாலும் உடம்பில் அந்த சோர்வு சிறிது நேரம் அப்படியே இருக்கும். நம் ஓய்வு எடுத்த பின் இது போன்று ஏற்படும் சோர்வுக்கு எவ்வித மருத்துவக் காரணங்களும் இல்லை. பொதுவாக, அனைவருக்கும் தூக்கத்துக்குப் பிறகு கொஞ்சம் சோம்பல் இருப்பது இயல்புதான்.
ஆனால், அதிக சோம்பலாக இருக்கும்பட்சத்தில் தூக்கத்துக்குப் பிறகு சிறு சிறு உடற்பயிற்சிகளைச் செய்து புத்துணர்ச்சி பெறலாம். அதிக நேரம் தூங்குவதும் உடல் சோர்வை ஏற்படுத்தலாம். ரத்தசோகையாலும் பெண்களுக்குச் சோர்வு ஏற்படலாம். எனவே, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது என அந்த சோர்வைக் குறித்து விளக்கியுள்ளார் மருத்துவர் சாய் ராம்.
- Advertisement -