தேங்காய்ப் பூவில் நார்ச் சத்து இருப்பதால் செரிமான தன்மையை அதிகப்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. அதைப்போல், இதில் இருக்கும் நீர்ச் சத்தால் நம் உடலில் உள்ள தண்ணீரின் அளவை சமமாக வைத்திருக்க உதவுகிறது. இந்த தேங்காய்ப்பூவில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதால் நம் உடலில் உள்ள செற்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவை அதிகமாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவதற்கும் உதவுகிறது.
மேலும், இதில் இருக்கும் தேங்காய் கருவின் மூலம் நம் உடலில் உள்ள செல்கள் அனைத்தும் புத்துணர்ச்சி பெற்றுச் சிதைவு ஆகாமல் பாதுகாக்கிறது. அதனால், சிறுநீரக நோய் மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் பயன்படுகிறது. அதைப்போல், இந்த தேங்காய்ப் பூவில் காப்பர், அயன், ஜிங்க் அதிகமாகவே இருக்கிறது. அதனால், சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை அதிகமாக்குகிறது.
இந்த நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகவே எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், அவர்களின் உடம்பில் இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. பெண்களும் இந்த தேங்காய் பூ சாப்பிட்டால், இதில் செலினியம் அதிகமாக இருப்பதால் முகப்பொலிவுக்கும், அழகாக இருப்பதற்கும் உதவுகிறது.