- Advertisement -
தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு ஜல்லிக்கட்டு ஆகும். இந்த விளையாட்டைத் தடை செய்ய வேண்டுமென பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்து விசாரணையில் ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடையில்லை என்றும், இது சம்பந்தமான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக 5 பேர் கொண்ட நீதிபதி அமர்வு ஒரு மனதாகத் தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், நடிகர் சூர்யா அவர்கள், ”ஜல்லிக்கட்டு நம் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. இதற்காக மாநில அரசுக்கு எனது வாழ்த்துக்களையும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தலைவணங்குகிறேன் எனக் கூறியுள்ளார்.
- Advertisement -