இந்த 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் மொத்தம் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தற்போது இந்த தேர்வு முடிவுகள் இன்று (மே 19) பிற்பகல் 2 மணிக்கு வெளியானது. இந்த தேர்வு எழுதியவர்களில் 90.93% பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் சற்று முன் அறிவித்துள்ளது.
மேலும், மாணவ, மாணவியர் இந்த பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தனித்தேர்வர்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் அனுப்பப்படும் என்றுள்ளனர். அதேநேரம், இந்த பொதுத்தேர்வில் மாணவர்கள் 86.99%, மாணவிகள் 94.36% தேர்ச்சி பெற்றதால், இந்த தடவையும் மாணவர்களை விட மாணவிகள் 7.37% அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக இயக்கம் தெரிவித்தது