- Advertisement -
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியானது. இதில் மொத்தம் 8,35,614 பேர் (91.39%) தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேசமயம் , மொழிப்பாடத்தில் யாரும் 100/100 மதிப்பெண் எடுக்காததால், இந்த பொதுத்தேர்வில் 500 முழு மதிப்பெண் யாவரும் பெறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த 10ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு வரும் மே 23ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- Advertisement -