2022-2023ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை 10 மற்றும் 11ஆம் வகுப்புக்கு நடைபெற்றது. இதில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பேர் பேரும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 80 ஆயிரம் பேரும் எழுதியிருந்தனர். இந்நிலையில், 10 மற்றும் 11ஆம் வகுப்புக்கான முடிவுகள் இன்று (மே 19) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 10 ஆம் வகுப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும், http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மதிப்பெண் மதிப்பெண் அறிந்துகொள்ளலாம் என அரசு தெரிவித்திருந்தது.
தற்போது இன்று காலை 10 மணிக்கு, 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது. இந்த பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 94.66% மாணவிகளும், 88.16% மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு இயக்ககம் அறிவித்துள்ளது.