கடந்த 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் டெஸ்லா மின்சார வாகனங்களின் உற்பத்தியைத் தொடங்குவதற்கான திட்டங்களை எலான் மஸ்க் அறிவித்தார். ஆனால் டெஸ்லா நிறுவனம் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதால் திட்டங்கள் மாறியதாகத் தெரிகிறது. மேலும், இந்தியாவில் இறக்குமதி வரி 100 சதவீதம் இருக்கிறது. அதனால் அவற்றை குறைக்க வலியுறுத்தி எலன் மஸ்க் முன் வைத்த கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தது
இதன் காரணமாக, டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் அவர்கள், ”கார்களை விற்கவும் சர்வீஸ் செய்யவும் முதலில் அனுமதிக்கப்படாத எந்த இடத்திலும் டெஸ்லா உற்பத்தி ஆலையை வைக்காது” என்று ட்வீட் மூலம் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், உலக அளவில் பேட்டரி கார்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் தனது உற்பத்தி ஆலை தொடங்குவது குறித்து மீண்டும் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது