நாடு முழுவதும் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் பல சர்ச்சை கருத்துக்களும், வேறு வேறு மதத்தில் இருக்கும் கேரளா பெண்கள் கடத்தப்பட்டு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி அவர்களை தீவிரவாத இயக்கத்தில் இணைத்துள்ளதை போல் வரும் காட்சி அமைப்புகளுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இப்படத்திற்கு மேற்கு வங்கம் அரசு தடை விதித்தது.
இந்நிலையில், இப்படம் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்கம் அரசு தடை விதித்துள்ளது என்றும், தமிழகத்தில் இப்படம் திரையிடப்படவில்லை போன்ற காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை மேற்கு வங்கத்தில் திரையிட விதிக்கப்பட்ட தடையை நீக்கப்படும் என்றும், தமிழகத்தில் இப்படத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடை செய்யக் கூடாது எனவும், படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் உச்ச நீதிமன்றம் ஆணை பிற்பித்துள்ளது.