- Advertisement -
இந்த கோடை காலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தால் பல பிரச்சனைகளில் மிகவும் ஆபத்தானது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்பப் பக்கவாதம். இது நிகழும்போது ஒருவரின் உடல் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸைத் தாண்டியிருக்கும். இதனால் உங்களுக்கு முழுவதுமாக அல்லது அரைகுறையாகச் சுயநினைவை இழந்திருக்கும் நிலை ஏற்படும் என்றனர்.
மேலும், பல நேரங்களில் இந்த வெப்பப் பக்கவாதம் நிகழும் போது வியர்வை பெரிய அளவில் சுரக்காது. முக்கியமாகக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த நிலை ஏற்படும். உடனே இதற்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் உயிரை இழக்கும் நிலைகூட ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
- Advertisement -