இந்த நடப்பாண்டு ஐபிஎல் லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் இனி வரவிருக்கும் ஒவ்வொரு போட்டியும் அனைத்து அணிக்கும் முக்கியமானது. இந்நிலையில், நேற்று (மே 17) நடைபெற்ற ஐபிஎல் லீக் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் – பஞ்சாப் ஆகிய இரு அணிகள் தர்மசாலா மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதலில் பேட்டிங்கில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 214 ரன் எடுத்தால் வெற்றி இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 15 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றது. இதனால் பஞ்சாப் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளதால், இந்த அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.