- Advertisement -
பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது அல்லது குங்குமம் வைப்பது என்பது நடைமுறையாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு மருத்துவ ஆராய்ச்சிகளின் படி, நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கு உரிய இடமாக இரு புருவங்கள் மத்தியில் இருக்கும் இடம் விளங்குகிறது. அதாவது அந்த இடம் எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின் காந்த அலைகளாக மனித உடல் சக்தியாக வெளிப்படுத்துகிறது.
அதிலும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின் காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால் தான் நமக்கு தலைவலி ஏற்படும் பொழுது அதை குளிர்விக்க குங்குமம் உபயோகமாக இருக்கிறது. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது என்பதை நம் முன்னோர்கள் வைத்த மருத்துவத்தை மறந்து விடக்கூடாது
- Advertisement -