பொதுவாக நீங்கள் சாப்பிடும் மற்ற பழங்களுக்கும் மாதுளைக்கும் வேறுபாடு உண்டு. இதில், துவர்ப்புச் சுவையோடு இனிப்பும் கலந்திருக்கும். இதிலுள்ள துவர்ப்பே மாதுளையின் சிறப்பு. மேலும், இந்த சித்த மருத்துவாத்தின் கூற்றுப்படி, ‘ஆறு சுவைகளில் துவர்ப்புச் சுவையானது உடலை உரமாக்கக்கூடியது’ என்று குறிப்பிடுகிறது. ஆகவே, நாம் இந்த மாதுளையை விதையுடன் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும்.
இந்த சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைக்க, வெள்ளை மாதுளை உதவும். அதன்படி, இந்தப் பழத்திலுள்ள துவர்ப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். இது வயிற்றுப்புண்ணை ஆற்றும், ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்கும், ரத்தசோகையைப் போக்கும். அதைபோல், பெண்களின் மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெள்ளை மாதுளைக்கு உண்டு.
மேலும், இந்த மாதுளம் பழத்தின் தோலுக்கு அடியில் மஞசள் நிறத்தில் காணப்படும் ஜவ்வுபோன்ற பகுதி, மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. இதைக் காயவைத்து, பொடியாக்கிப் பயன்படுத்தலாம். அது சீதபேதி, கழிச்சலைக் கட்டுப்படுத்தும்.