நாம் குழந்தைகளை குளிப்பாட்ட நிச்சயம் நலங்குமாவு பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் இந்த நலங்குமாவில் சேர்க்கப்படுகிற பொருள்கள் யாருக்கு எந்தவித ஒவ்வாமையையும் ஏற்படுத்தலாம். அதைபோல், பிறந்த குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும். அதில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அது மாறுபடும். சில குழந்தைகள் அலர்ஜி தன்மையோடு பிறப்பார்கள்.
குழந்தையின் சருமம் ஓரளவு முதிர்ச்சியடையும்வரை அந்த ஒவ்வாமை தொடரும், அது ஒரு கட்டத்திற்கு பிறகுதான் சரியாகும். ஆகவே, குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிட்டுக் குளிப்பாட்டுவதும் தேவையற்றது. மேலும், பொதுவாக குழந்தையின் சருமத்தில் இயல்பிலேயே எண்ணெய்ப்பசை அதிகமிருக்கும். அதுவே குழந்தைக்கு போதுமானது. இதை தவிர்த்து, எண்ணெய் தடவுவதால் குழந்தையின் சருமத்தில் கட்டிகள், இன்ஃபெக்சன், அலர்ஜி போன்றவை உருவாக நாமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகி விடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.