கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, எடப்பாடி பழனிசாமி அவர்கள் தாக்கல் செய்ய செய்யப்பட்ட வேட்புமனுவில் சொத்து மதிப்பு குறைத்து காட்டியுள்ளதாக சேலத்தில் வழக்கறிஞர் மிலானி என்பவர் வழக்கு கொடுத்திருந்தார். இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அடுத்து வரும் 30 நாட்களுள் தீர விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக புகார்தாரர் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளது என தகவல் வந்துள்ளது.