நியூசிலாந்தின் தலைநகரில் உள்ள வெலிங்டனில் அமைந்திருக்கும் 4 மாடி கொண்ட விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் 100 மேற்ப்பட்ட பேர் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு எதிர்பாராதவிதமாக இந்த விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் 90க்கும் மேற்பட்டார் இந்த தீ விபத்தில் சிக்கி உள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரும் இணைந்து இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் இதில் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும், இந்த விபத்தில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது என்றனர். அதைபோல், இந்த தீ விபத்தால் அப்பகுதி வாழும் மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது