விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சுமார் 16 பேர் நேற்று முன் தினம் கள்ள சாராயம் குடித்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு வாந்தி , மயக்கம் போன்றவற்றை ஏற்பட்டதால் அங்குள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர், மீதி பேருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, சுமார் 22 பேர் கள்ளச்சாராய விற்பனையாளர்களை கைது செய்துள்ளனர், மேலும் 100 மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது, இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற, இன்று பிற்பகலில் விழுப்புரம் செல்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தகவல் வந்துள்ளது.