- Advertisement -
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பல மக்கள் தங்களது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் பல குளிர்ச்சியான ஊருக்கு செல்லுகின்றனர். தற்போது பல மாவட்டங்களில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் மக்கள் குவிந்து வருகின்றனர். இங்கு புகழ்பெற்ற திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை கடந்த 2 நாட்களில் மட்டும் 18,000 பேர் சுற்றுலா படகில் சென்று ரசித்துள்ளனர் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் சற்றுமுன் தகவல் அளித்தனர்
- Advertisement -