உங்களில் உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் ஊறுகாயைத் தவிர்ப்பது நல்லது. மேலும், இந்த ஊறுகாயை தொடர்ச்சியாக சாப்பிட்டால் அல்சர், உணவுக்குழாய் எரிச்சல், வயிற்றுக்கோளாறுகள் ஏற்படலாம். அதுமட்டுமில்லாமல், இந்த ஊறுகாயில் உள்ள உப்பு, எண்ணெய், காரம் அதிகமாக இருக்கும் என்பதால், அனைவருமே ஊறுகாயைத் தவிர்ப்பது நல்லது.
அதிலிலும் குறிப்பாக, அதிக உப்பும், எண்ணெயும் இந்த ஊறுகாயில் இருப்பதால் இதய நோயாளிகளைப் பாதிக்கும். எனவே, அவர்கள் ஊறுகாயைத் தவிர்க்கவேண்டும். மேலும், இந்த அசைவ ஊறுகாய்கள் சாப்பிட ஏற்றதல்ல. அதிலும் முறையாகப் பாதுகாக்கப்படாத ஊறுகாயில் தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகி, வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும் என உணவியல் நிபுணர் எச்சரித்துள்ளனர்