வாழை மரத்தின் இலை முதல் பழம் வரை அனைத்திலும் மருத்துவக்குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில், வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது சிறுநீர் பெருக்கியாக செயல்படுவதால் சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகும். மேலும், இந்த வாழைத்தண்டை சூப் அல்லது சாறாக சாப்பிடுவதைவிட கூட்டு, குழம்பு என சமைத்துச் சாப்பிடலாம்.
ஏனென்றால், இந்த வாழைத்தண்டை சாறாக்கி அருந்தினால் அது ஓவர் டோஸ் ஆகி உடலில் கால்சியம் சத்தைக் குறைத்து வேறுசில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆகவே, வாழைத்தண்டு சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது என்பதற்காக தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லதல்ல. வாரத்தில் இரண்டு நாள்களுக்கு மேல் சாப்பிட்டால் சில பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.