- Advertisement -
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் சுமார் 11 பேர் இதுவரை உயிரிழந்தனர், மீதி பேருக்கு தற்போது சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழுப்புரத்திற்க்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இவர்களின் சிகிச்சை குறித்தும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து உள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுத்திட வேண்டும் என்ற அரசின் கடுமையான உத்தரவை, உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல் கண்காணிக்க தவறியவர்கள் மீது, தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
- Advertisement -