ஐபிஎல் தொடரில் நேற்று (மே 11) நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்து ராஜஸ்தான் அணி 13.1 ஓவரிலேயே 150 ரன் இலக்கை அடைந்து அசத்தல் வெற்றி பெற்றது. இதில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகள் சந்தித்து 98 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் அபாரமாக விளையாடினார்
இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரை சதத்தை பதிவு செய்த ராஜஸ்தான் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.மேலும், இவர் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இவர் இதுவரை 12 போட்டிகளில் விளையாடிய ஜெய்ஸ்வால் மொத்தம் 575 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.மேலும், இதில் 1 சதம் மற்றும் 4 அரை சதங்கள் அடங்கும் என தகவல்