கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். இது மோடியின் சமூகத்தினரை பெரிதாக இழிவுபடுத்தியது. இதனால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதன் காரணமாக இவரது எம்.பி பதிவி பறிக்கப்பட்டது. இதில் தண்டனை உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்ப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக் பாய் வர்மா உட்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வை தற்போது நிறுத்திவைத்தது உச்ச நீதிமன்றம். ஏனென்றால், நம்முடைய தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும். இது தொடர்பான குஜராத் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை மற்றும் அரசின் அறிவிக்கை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.