தமிழகத்தில் கடந்த மாதம் பல மாவட்டங்களில் அதிபட்சம் வெயில் வாட்டி வந்திருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்றின் ஈரப்பத்தால் பல இடங்களில் கனமழை பெய்து வந்தது. இதையடுத்து, மே 5 ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்திருந்தது. ஆனால், அதேசமயம் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மோக்கா (Mocha) புயலாக உருவானது. மேலும், இந்த புயல் இன்று (மே 11) இரவு தீவிர புயலாகவும், நாளை மிகத்தீவிர புயலாகவும் வலுப்பெறும் என்றும், இது வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் மே 14 ஆம் தேதி காலை வங்கதேசம் – மியான்மர் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
மேலும், இந்த புயல் காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்தபடி வடக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கூறியுள்ளனர்.