உலகில் தற்போது அனைத்து துறையிலும் பொருளாதார மந்தநிலை நீடித்து வருகிறது. அதிலிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். அவை அமேசான், டான்ஸோ , ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பேரை இதுவரை பணிநீக்கம் செய்துள்ளனர்.
அந்த வகையில், கூகுளும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து அங்குள்ள ஊழியர்கள் கூறியது, இந்த கூகுள் நிறுவனம் பல ஆயிரம் பேரை வேலையிலிருந்து தற்போது நீக்கி வரும் சூழலில், அந்நிறுவன CEO சுந்தர் பிச்சை, தனது ஆண்டு வருமானமாக சுமார் 1,840 கோடி பெற்று வருவது வேதனை அளிப்பதாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
மேலும் , அவர் இங்கு ஆட்குறைப்பு மற்றும் ஊழியர்களின் சலுகைகள் குறைப்புக்கு மத்தியிலும், சுந்தர் பிச்சை தனது சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்