இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தனது விமான சேவையின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக தற்போது புதிய யுக்தியை அமல்படுத்தி உள்ளது. இந்த ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் இதுவரை தனது சேவையில் இல்லாத 25 விமானங்களை தற்போது மீண்டும் இயக்கப்போவதாக திட்டம் தீட்டியுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்காக சுமார் 400 கோடியை செலவழித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும், இந்த 400 கோடியை கடனாக பெற ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வங்கியை அணுகியுள்ளது. இந்த பணத்தை அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிதியை தற்போது வங்கி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கோ ஃபர்ஸ்ட் (GoFirst) விமான நிறுவனம் தற்போது திவாலான நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.