Wednesday, April 17, 2024 4:46 am

அஜித்தை வைத்து ஆயிரம் கோடி லைக்கா போடும் புதிய கணக்கு ! உச்ச கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தற்காலிகமாக ஏகே 62 என்று பெயரிடப்பட்டுள்ள அடுத்த படத்தில் இணைவதாக அஜித்குமார் அறிவித்தார். ஆனால், கடந்த சில நாட்களாக அஜித், விக்னேஷ் படம் தள்ளிப்போனதாகவும், ஏகே 62 படத்துக்கு புதிய இயக்குனர் களமிறங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இயக்குனர் மகிழ் திருமேனி முன்னணியில் உள்ளார்.

கொடுக்கப்பட்ட நாட்களுக்குள் விக்னேஷ் சிவன் ஸ்கிரிப்ட்டை முழுவதுமாக முடிக்கவில்லை என்ற காரணத்தால் லைகா நிறுவனம் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் அதே வேளையில் விஜய்யின் “லியோ” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதால் ,அந்த படத்துடன் போட்டிப் போடுவதற்கு நிகரான ஒரு கதையம்சம் தேவை என்பதனாலும், விக்னேஷ் சிவன் சொன்ன ஸ்கிரிப்ட் “லியோ” திரைப்படத்துடன் போட்டிப்போடும் அளவுக்கான ஸ்கிரிப்ட் இல்லை என்ற காரணத்தினாலும்தான் அவரை “ஏகே 62” புராஜக்ட்டில் இருந்து நீக்கியதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது.

காரணம் எதுவாகிலும் விக்னேஷ் சிவன் “ஏகே 62” திரைப்படத்தில் இருந்து விலகியது உண்மைதான் என பல பத்திரிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து விஷ்ணு வர்தன் அஜித்துடன் கைக்கோர்க்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்தது.

மேலும் சமீப நாட்களாக “ஏகே 62” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக செய்திகள் வலம் வருகிறது. இது ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, தனது வீடியோ ஒன்றில் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது அஜித் குமார் “கே.ஜி.எஃப்” இயக்குனரான பிரசாந்த் நீலுக்கு தொடர்புகொண்டு நாம் படம் பண்ணலாமா என்று கேட்டிருக்கிறார். பிரசாந்த் நீல் அஜித்தின் தீவிர ரசிகராம். அஜித்தே தொடர்புகொண்டு “படம் பண்ணலாமா?” என்று கேட்டதும் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம்.

ஆனால் தற்போது பிரசாந்த் நீல் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களை இயக்கவுள்ளாராம். ஒரு படத்தை முடிக்க எப்படியும் ஒன்றரை வருடங்கள் ஆகும், ஆதலால் இப்போது அவரால் அஜித்தை வைத்து படம் இயக்கமுடியாத சூழலில் இருக்கிறாராம்.

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல்லை லைக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாகவும் தெரிகிறது

இதனை அஜித்திடம் கூறியிருக்கிறார் பிரசாந்த் நீல். அதற்கு அஜித்குமார், “சரி, நாம் சில வருடங்களுக்குப் பிறகு இதை பற்றி பேசலாம்” என்று கூறினாராம். ஒருவேளை “ஏகே 63” அல்லது “ஏகே 64” திரைப்படத்தில் அஜித், பிரசாந்த் நீலுடன் கைக்கோர்க்க வாய்ப்பிருக்கலாமோ!!

இதற்கிடையில், இயக்குனர்கள் அட்லீ, விஷ்ணு வரதன் மற்றும் மகிழ் திருமேனி ஆகியோரின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வரும் நிலையில், அட்லீ மற்றும் விஷ்ணு வரதன் பேச்சுவார்த்தையில் இருப்பதாக வெளியான செய்திகள் பொய்யான செய்தி என்று எங்கள் வட்டாரம் கூறுகிறது. அட்லீயும் விஷ்ணுவும் பாலிவுட் கமிட்மென்ட்களில் பிஸியாக இருக்கும்போது, மகிழ், ஏற்கனவே ஒரு முடிக்கப்பட்ட ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது, இது அவருக்கு சாதகமாக அமைந்தது. மேலும் சில இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டாலும், தடம் படத் தயாரிப்பாளரே இந்த திட்டத்தை இயக்க முன்னோடியாக உருவெடுத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்