உலக நாடுகள் தற்போது உள்ள டெக்னாலஜி மூலம் பல்வேறு சாதனைகள் செய்து வருகின்றனர், அதில் குறிப்பாக செயற்கோள் மூலம் நம் உலகத்திற்கு தேவையான தகவல்கள் நமக்கு உடனடியாக கிடைக்கிறது. அந்த வகையில் இந்த டெக்னாலஜி பல படிகள் முன்னேறியுள்ளன. இதில் சில நாடுகள் விண்ணில் விண்கலம் செலுத்தி தோல்வி கண்டுள்ளது, அதேசமயம், அமெரிக்கா,சீனா, ரஷ்யா, இந்திய போன்ற நாடுகள் தங்களது செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
அந்தவகையில், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கழகமான (இஸ்ரோவின்) இணை இயக்குனர் எஸ்.வி.சர்மா அவர்கள் ஒசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் தற்போது சந்திராயன்-3 என்ற செயற்கோள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது என்றும், விரைவில் இது விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளதாக கூறினார். மேலும், அவர் வரும் செப்டம்பர் மாதம் இந்த சந்திராயன் -3 செயற்கைக் கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.