தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள அனைத்து நியாய விலை கடைகள் மூலம் ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வழங்கி வருகின்றன.மேலும், இந்த நியாய விலை கடைகளில் மண்எண்ணெயையும் மக்களுக்கு மலிவான விலையில் கொடுக்கப்படுகிறது. இதில் பண்டிகை காலம் தொட்டு வழங்கும் நிதி, அவசரகால நிதி உதவி போன்றவற்றையும் இதன் மூலமாக மக்கள் பெறப்பட்டு பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் பொதுமக்கள் அவர்களின் தேவைக்கேற்ப வாங்கி வருகின்றனர். அப்படி வாங்கும் பொருட்கள் தவிர, இந்த ரேஷன் கடைகளில் வாங்கப்படாத பொருட்களுக்கு சேர்த்து பில் போடுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் இனி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.