தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் இந்த கல்வியாண்டின் இறுதி தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்றுடன் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிந்துள்ளது. ஆகவே, இன்று முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், இதில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் கடந்த மாதம் முடிவடைந்தது என்றும், மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் தற்போது இந்த ஆண்டு தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.
இதன்படி, இன்று முதல் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை விடுபடுகிறது என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், இனி 6 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அதைபோல் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.