இந்தியாவில் நாளை பிரதமர் நரேந்திர மோடியின் மான் கீ பாத் என்ற நிகழ்ச்சியின் 100 வது எபிசோட் எட்ட உள்ளது. இதன் காரணமாக நாளை ரூ.100 நாணயம் அறிமுகப்படுத்த உள்ளது மத்திய அரசு. இந்த மான் கீ பாத் என்ற நிகழ்ச்சி கடந்த 2014ல் முதல் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவருக்கும் அனைத்து மக்களுடன் மோடி பேசி வருகிறார். தற்போது இதன் 100 வது நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
இதன் காரணமாக இந்த 100வது நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாட பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சி இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் ஒளிபரப்பப்படும் என்று பாஜக கட்சி தெரிவித்துள்ளனர். அதைபோல் இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசு சார்பில் ரூ.100 நாணயம் வெளியிடப்படுவது குறித்து இந்திய பொருளாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த 100 ரூபாய் நாணயம் எப்படி இருக்கும் என்ன என்ற மக்களின் கேள்விக்கு நாளை பதில் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.