தமிழகத்தில் அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் வரும் மே மாதம் நடைபெறும் என மக்களுக்கு தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதன்படி சென்னையில் அகில இந்திய அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் வரும் மே -17ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என தெரிவித்திருக்கின்றனர். இந்த முகாமில் கலந்துகொள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அவர்கள் அலுவலகத்தில் இருந்து காணொளி மூலம் இதில் பங்கேற்பார்
மேலும், இந்த முகாமில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் குறித்து மக்களுக்கு ஏற்பட்ட சந்தேங்கங்களை நிவர்த்தி செய்யவும் அல்லது குறைகளை மக்கள் தெரிவிக்கவும் இந்த முகாம் நடைபெறுகிறது. இதற்காக அஞ்சல் துறை bgt.tn@indiapost.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது அனுப்பினால் அன்று நடைபெறும் காணொளியில் இந்த குறைகளை குறித்து பரிசீலிக்கப்படும். ஆனால், குறைகளை வரும் மே 10 மதியம் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.