டெல்லியில் உள்ள பிரபல நிறுவனமான ரோஸ் வேலி பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்து இதுவரை பல கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த பணமோசடிக்கு பி.எம்.எல்.ஏ என்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டில் ரோஸ் வேலி குழுமத்தின் தலைவர் கவுதம் குண்டு ஏற்கனவே இந்த பண மோசடியில் ஈடுபட்டு கைதாகினர். இவர் தற்போது வரை சிறையில் உள்ளார். இந்நிலையில், மீண்டும் ரோஸ் வேலி குழுமத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்த ரோஸ் வேலி குழுமத்தின் பணமோசடி காரணமாக ஏற்கனவே ரூ.1,171 கோடிக்கு மேலுள்ள சொத்துக்களை முடக்கி உள்ள நிலையில், தற்போது மீண்டும் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது. மேலும், இந்த ரோஸ் வேலி குழுமத்தின் பெயரில் உள்ள பாலிசிகள் மற்றும், பல மாநிலங்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் மனைகள் பற்றிய விவரத்தை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.