தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் நன்கு படித்து பின் நல்ல அரசாங்க உத்தியோகம் வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளது. அதற்காக பல லட்சம் இளைஞர்கள் நாள்தோறும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) என்ற இணையத்தில் விண்ணப்பித்து அதற்கான தேர்வு முறையில் தேர்வெழுதி இந்த அரசு பணிகளில் அமர்த்தப்படுகின்றனர்.
இதற்காக தமிழக அரசு பல காலியிடங்களை அவ்வப்போது வெளியிட்டு இளவயது இளைஞர்களுக்கு தேர்வு முறையில் தேர்வு செய்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), தடயவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பதவியில் தற்போது 31 காலிபணியிடங்கள் இருப்பதாக நேற்று அறிவித்துள்ளது. இதற்காக வரும் மே 26ம் தேதி வரை மட்டுமே இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
அதைபோல், இந்த காலிபணியிடங்களான முதல் தாள் தேர்வு (முதுநிலை பயன்றவர்கள்) எழுத்து தேர்வு வரும் ஜூலை 23ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை இருக்கும் என்றும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்