தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் நாள்தோறும் மக்கள் ஜூஸ் கடைகளை ஜூஸ் வாங்கி குடிக்கிறார்கள். இதன் காரணமாக, தருமபுரி மாவட்டத்தில் உள்ள குளிர் பான கடைகளுக்கு ஆட்சியர் வழிகாட்டு நெறிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சாலையோரம் விற்கும் வணிகர்கள் மக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான பழச்சாறுகளை வழங்க வேண்டும் என்றும், ஜூஸ் விற்கும் வணிகர்கள் அனைவரும் கட்டாயம் பதிவு பெற்று இருக்க வேண்டும்.
மேலும், இந்த குளிர் பனங்களில் உள்ள அனைத்து மூல பொருட்களுக்கும் உரிமை பெற்றிருக்க வேண்டும் என்றும், ஜூஸ் சேர்க்கப்படும் தண்ணீருக்கு தரச்சான்று பெற வேண்டும். அதைபோல் அதிக செயற்கை வண்ணங்கள் சேர்க்க கூடாது , காலாவதி தேதியை உறுதி செய்யவும், அழுகிய பழங்களை சேர்க்க கூடாது, செயற்கை பழங்களை பயன்படுத்த கூடாது என கூறியுள்ளனர்.
அதைபோல், பழங்களை அரைக்கும் மிக்ஸியை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் போன்ற வழிகாட்டுகளை அறிவுறுத்துள்ளனர். மேலும், இதுகுறித்து புகார்களை 9444042322 என்ற எண்ணுக்கு தெரிவித்தால் அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும்.