கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் உள்ள மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் அவர்கள் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சிமாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷன் சரண் சிங்க்கு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து விசாரிக்க விளையாட்டு துறை சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் மேரிகோம் தலைமையில் விசாரணை செய்யப்பட்டு அதன் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது வரை ரிஜ் பூஷன் சரண் சிங்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். இதனால் உச்சநீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகாரின் படி இன்றே வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.