சூடான் நாட்டின் ராணுவத்திற்கும், துணை ராணுவத்தற்கும் இடையே சில மோதல்கள் வந்தது. இதன் காரணமாக அந்நாட்டில் தற்போது பெரும் போர்மேகம் சூழ்ந்துள்ளது. இதனை அறிந்த உலக நாடுகள் அங்கு வசிக்கும் வெளிநாட்டின மக்களை பாதுகாப்பாக மீட்க வேண்டி இந்தியா உட்பட பல நாட்டினரின் தலைவர்களின் கோரிக்கை ஏற்று சுமார் 72 மணி நேரம் போர் நிறுத்த வேண்டும் என கேட்டு கொண்டனர். இதற்கு அந்த இரு அமைப்புக்கு சமரசமாக ஒத்துகொண்டு இருந்தது.
இதன் காரணமாக, கடந்த 24 ஆம் தேதி முதல் போர் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் அவரவர் நாட்டுக்கு செல்ல முடிந்தது. மேலும், இந்த போரால் சுமார் 400 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அறிந்த உலக நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில், தற்போது நேற்று நள்ளிரவு முதல் 72 மணி நேரம் போர் முடிவு பெரும் நிலையில், வெளிநாட்டு தலைவர்கள் மீண்டும் சூடான் ராணுவத்திடம் சமரசமாக பேசி மேலும் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்த வேண்டும் என்பதை கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அந்நாட்டு ராணுவமும், துணை ராணுவம் கூட்டாக அடுத்த 72 போர் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.