மத்திய அரசின் கீழுள்ள பணியாளர்கள் அவர்களுக்கு இனி உறுப்பு தானம் அல்லது ஏதேனும் பெரிய அறுவை சிகிச்சை செய்தால் அந்த பணியாளர்களுக்கு குணமடைய நாளாகும். மேலும், மத்திய அரசு ஊழியர்கள் யாருக்கேனும் செய்யும் உறுப்பு தானத்தால் அவர்களின் உடலுக்கு கொஞ்ச நாட்கள் ஓய்வு தேவைப்படும். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு விடுமுறை வழங்க முடிவெடுத்துள்ளது.
மேலும், இந்த சிறப்பு விடுமுறை தற்போது 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசு மருத்துவர்களின் கருத்தை கேட்டது அரசு, அதனால் இனி உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு இனி 42 நாட்கள் சிறப்பு விடுமுறை அறிவித்தது. மேலும், இந்த சிறப்பு விடுமுறை மற்ற விடுமுறைகளுடன் இணைக்கப்படாது என தெரிவித்துள்ளனர்.
மேலும், நாம் செய்யும் உறுப்பு தானம் சிகிச்சை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்மட்டுமே எடுக்க வேண்டும். இல்லை நாம் தனியார் மருத்துவமனைகளில் எடுத்தால் அங்கு சம்பந்தப்பட்ட துறை தலைவரின் சான்றிதழை கட்டாயம் விடுப்பு வேண்டிய போது சமர்ப்பிக்கனும் என தெரிவித்துள்ளனர்.