இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பல தொழில்கள் இருக்கிறது. அதிலிலும் குறிப்பாக விமான வழி சேவையான ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏகபோக உரிமையாளர் ஆவர். ரத்தன் டாடாவுக்கு இந்த ஏர் இந்திய நிறுவனத்தில் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்டவர்கள் விமானிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது புதிதாக 1800க்கும் மேற்பட்ட விமானிகள் பணியில் சேர்க்கப்போவதாகவும், அதற்காக 470 விமானங்கள் புதிதாக வாங்க போவதாக திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக தான் 1800 மேல் பணியாளர்கள் புதிதாக சேர்க்கப்படப்போவதாகவும், அதில் விமானிகள் மற்றும் முதல் நிலை அதிகாரிகளை முதற்கட்டமாக பணியமர்த்த முடிவெடுத்திருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆனால், ஏற்கனவே ஏர் இந்திய நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு போதுமானதாக இல்லை என பலரும் கூறி வருகின்றனர்.
மேலும், இங்கு பணிபுரியும் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் பணியாளர்களிடம் மரியாதையுடன் நடத்துவதில்லை என்றும், இது குறித்து விரிவாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கு தற்போது கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.