Thursday, April 18, 2024 10:12 am

சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெண்கள்..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் தற்போது ஐபிஎல் சீசன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நம் கிரிக்கெட் வீரர் தோனி தலைமையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது சிறப்பாக இந்த சீசனில் விளையாடி வருகிறது. இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 30ம் தேதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணி முதல் தொடங்கியது.

அதனால் இந்த போட்டியை நேரில் காண ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இன்று காலை முதலே கூடி டிக்கெட்டை வாங்கி சென்றுள்ளனர். இந்த டிக்கெட்டின் விலை ரூ.1,500, ரூ.2000, ரூ.2500 ஆகிய டிக்கெட்டுகள் கவுண்டர்கள் வழியாக விற்பனையாகிறது. அதைபோல், ரூ.3,000, ரூ.5000 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இந்த டிக்கெட் கவுண்டர்களில் வாங்க ஆண்களுடன் போட்டிபோட்டு வாங்குவதில் பெண்களுக்கு சிரமம் உள்ளதால் பெண்களுக்கு தனிவரிசையில் டிக்கெட் வினியோகம் செய்யப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்