பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். தற்போது இந்த பொன்னியின் செல்வன் 2 படம் நாளை (ஏப்.28) ரிலீஸாக உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளன. இதற்கான ப்ரோமோஷன் பணிகளை அப்படக்குழு செய்து வருகின்றனர். இதையொட்டி இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஐமேக்ஸ் உள்ளிட்ட பல தியேட்டர்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு நள்ளிரவு காட்சிகள் அல்லது சிறப்பு காட்சிகள் இருக்குமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் பொன்னியின் செல்வன் 2 சிறப்பு காட்சிகள் வழங்க தமிழக அரசு அனுமதி தரவில்லை என தெரிவித்துள்ளனர். அதனால், திரையரங்குகளில் முதல் காட்சி காலை 9 மணி முதல் திரையிடப்படும் என கூறுகின்றனர்.
ஆனால், வேறு மாநிலங்களில் அதிகாலை 4 மணி முதல் பொன்னியின் செல்வன்- 2 திரையிடப்படும் என கூறியுள்ளனர்.