தென்னிந்திய படம் மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூமிகா. இவர் முதன்முதலில் நடிகர் விஜய் நடிப்பில் வெளி வந்த பத்ரி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல வெற்றி படங்களான ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்றவற்றில் நடித்திருப்பவர் ஆவர்.
இந்நிலையில், இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை பூமிகா அவர்கள் அளித்த பேட்டியில் முன்னணி நடிகர்கள் தற்போது மகள் வயது உள்ள ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்வதை மக்கள் நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதைபோல், நடிகைகளும் இளவயது ஹீரோக்களுடன் ரொமான்ஸ் செய்யும் போது அதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக, இந்திய திரையுலகில் இந்த பேட்டி தற்போது மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது