உலக நாடுகளிடையே இன்னும் கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில், தற்போது இந்தியாவிலும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாவே அதிகரித்து வருகிறது. அதன்படி தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 8000 முதல் 9000 வரை பதிவாகி வருகிறது. மேலும், இந்த பரவல் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
ஆனாலும், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57,410 ஆக குறைந்துள்ளது என்றும், இந்த கொரோனாவால் பலியானவர்கள் 5 லட்சத்து 31 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது என ரிப்போர்ட் மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி அளித்துள்ளது.