இந்தியர்கள் மிக மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி. இந்த தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் வாழும் இந்தியர்கள் அந்நாட்டு சட்டத்தின்படி விசேஷமாக கொண்டாடுகிறார்கள்.அதன்படி அமெரிக்காவிலும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக 2002 முதல் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ஒரு சில மாகாணங்களில் ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பென்சில்வேனியா மாகாணத்திலும் அங்கு வசிக்கும் இந்தியர்களை கருத்தில் கொண்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன என அம்மாகாணத்தின் மேயர் கூறியுள்ளார். மேலும், இதற்கான சட்டமாக நிறைவேற்றப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.